உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்புதியவை

மட்டக்களப்பு களப்பு பகுதியில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள்!

மட்டக்களப்பு களப்பு பகுதியில் இருந்து தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த களப்பில் இருந்து 100 அடி நீளமான 106 தடை செய்யப்பட்ட வலைகளை நேற்று ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்புக்களின் போது இவ்வாறு கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட வலைகளை சட்டநடவடிக்கைகளுக்காக மட்டக்களப்பு துணை மீன்வள பணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

கருத்து தெரிவிக்க