வெளிநாட்டு செய்திகள்

லண்டனில் தீவிபத்து -20 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் சேதம்

இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் ஏற்பட்ட தீவிபத்தில் 20க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் சேதமடைந்தன.

லண்டனின் கிழக்குப் பகுதியில் உள்ள பார்க்கிங் (Barking) என்ற இடத்தில் புதிதாக அமைக்கப்பட்ட வீட்டு தொகுதியில் உள்ளூர் நேரப்படி நேற்று மாலை  குடியிருப்பு ஒன்றின் 6வது தளத்தில் உள்ள வீட்டில் தீப்பற்றியது.

இதைத்தொடர்ந்து ஏனைய வீடுகளுக்கும், தளங்களுக்கும் தீ வேகமாகப் பரவியுள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த  சுமார் 100 தீயணைப்பு வீரர்கள் மூன்று மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

விபத்துக்குள்ளான கட்டடத்தில் தீயை கட்டுப்படுத்தும் கருவிகளோ, முன்னெச்சரிக்கை அலாரமோ இல்லை என்று தெரிய வந்துள்ளது.

விபத்தில் இருவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்து தெரிவிக்க