சினிமா

திரைப்படத்தை வெளியிடுவதே பெரும் சிரமம் -நடிகர் பிரசன்னா

திரைப்படம் ஒன்றை தயாரிப்பதை விட வெளியிடுவது சிரமம் என நடிகர் பிரசன்னா தெரிவித்துள்ளார்.

சொந்த படம் எடுக்கும் கனவில் இருந்த நடிகர் பிரசன்னாவிடம் இன்னும் திரைப்படம் ஒன்றை ஆரம்பிக்கவில்லையா என கேட்டபோது, நான் தயாரிக்கவிருந்த திரைப்படத்தில் ஆரம்பகட்ட வேலைகள் எல்லாம் முடிவடைந்த நிலையில் அதே போன்றதொரு கதை பத்திரிகை செய்தி ஒன்றில் வெளியாகி இருந்தது.

அதனால் அந்த பட வேலைகளை கைவிட்டு விட்டோம். தற்போது மீண்டும் நல்ல கதை ஒன்றை தேடி வருகிறோம்.ஆனால் இப்போது தயாரிப்பதை விடவும் வெளியிடுவதே பெரும் சிரமமாக உள்ளது என கூறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க