சினிமா

சர்ச்சைக்கு பின் வெளியாகிறது களவாணி -2

ஓவியா,விமல் நடித்த களவாணி பாகம் 2 சர்ச்சைக்கு பின்னர் இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது.

2010 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட களவாணி திரைப்படம் பெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து ஒன்பது வருடங்களின் பின் மீண்டும் பாகம்-2 உருவாக்கப்பட்டது.

எனினும் தயாரிப்பாளர் ஒருவர் இப்படத்திற்கெதிராக மேற்கொண்ட வழக்கை தொடர்ந்து படம் வெளியாக தடை விதிக்கப்பட்டது.

போலியான ஆவணங்களை தயார் செய்து இந்த படத்தை வெளியிட விடாமல் செய்கிறார்கள் என இப்படத்தின் இயக்குனர் சற்குணம் பொலிஸ் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்நிலையில் படத்தின் நாயகன் விமல் குறித்த தயாரிப்பாளரிடம் சமரசமாக பேசி வழக்கை வாபஸ் பெற செய்துள்ளார்.

கருத்து தெரிவிக்க