மலையகச் செய்திகள்

தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அனுமதி

தேயிலை, இறப்பர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பெருந்தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த வேலைத்திட்டம் தொடர்பாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க சமர்ப்பித்த ஆவணத்திற்கே அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

மலையக புதிய கிராமங்கள்,அடிப்படை வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து இவ்வேலைத்திட்டத்தை மேற்கொள்ளவிருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க