வடக்கு செய்திகள்

யாழ் தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்திக்கான அடிக்கல் நாட்டப்பட்டது

தேர்தல்கள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண மாவட்ட புதிய அலுவலகத்திற்கான அடிக்கல் இன்று நாட்டி வைக்கப்பட்டது.

யாழ் பழைய பூங்கா வாத்தியார் அமைந்துள்ள பகுதியில் இன்று காலை 9.30 மணிக்கு இவ்வடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

யாழ் மாவட்ட அரச அதிபர் என்.வேதநாயகம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் அரச அதிபர் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

யாழ் மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களில் ஒருவரான ரட்ணஜீவன் கூல், தேர்தல்கள் திணைக்களம் பணிப்பாளர், தேர்தல்கள் அலுவலக அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கருத்து தெரிவிக்க