வெளிநாட்டு செய்திகள்

காயிதே மில்லத்தின் 124வது பிறந்த நாள் இன்றாகும்

இந்தியாவின் பெருமைமிகு முஸ்லீம் தலைவர்களில் ஒருவரான காயிதே மில்லத்தின் 124வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது.

இதனை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் அமைந்த பள்ளிவாசலில் அவரது நினைவிடத்திற்கு சென்று துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மலரஞ்சலி செய்தார் .இதேபோன்று இந்நிகழ்வில் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள் என பலரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

“காயிதே மில்லத்தின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்” என்ற மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவின்படி கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக துணை முதல்வர் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க