கிழக்கு செய்திகள்

மட்டக்களப்பு மேற்கு வலயத்தில் ஆசிரியர்கள் பற்றாக்குறை-கல்வி நிலை பின்னடைவு

மட்டக்களப்பு மேற்கு வலயத்தில் ஆசிரியர்களது பற்றாக்குறையே கல்வி நிலை பின்னடைவுக்கு காரணம் என மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய, கல்வி நிலைமை தொடர்பான சூழ்நிலைப் பகுப்பாய்வும் கல்வி அபிவிருத்தியினை திட்டமிடல் தொடர்பான நிகழ்வு இன்று கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது இங்கு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார. அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மேற்கு வலயத்தில் ஆரம்பப்பிரிவில் 76 ஆசிரியர்களும் இடைநிலைப் பிரிவில் 80 ஆசிரியர்களுமாக 156 ஆசிரியர்கள் வெற்றிடமாகவுள்ளன.இது கல்வி பின்னடைவுக்கு காரணமாகியுள்ளது .

இதேபோன்று எமது வலயத்தில் உட்கட்டமைப்பு, சுகாதாரம் போன்ற வசதிகளையும் ஏற்படுத்தும் தேவையும் உள்ளன.

நாம் எதிர்காலத்தில் இவ்வலயத்திலுள்ள மாணவர்களின் கல்வி மட்டத்தினை உயர்த்துவதற்காக சிறந்த வளவாளர்களை பெற்று வகுப்புக்களை நடத்த திட்டமிட்டுள்ளோம் இதற்கு உதவுவதற்கு சமூக நலன் சார்ந்த அமைப்புக்கள் முன்வரவேண்டும் எனவும் வலயக்கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறீதரன் மேலும் தெரிவித்தார்.

 

கருத்து தெரிவிக்க