உள்நாட்டு செய்திகள்புதியவை

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை விடுத்துள்ள வேண்டுகோள்!

பொறுமையுடனும் நிதானத்துடனும் இருக்குமாறு சகல முஸ்லிம் மக்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கேட்டுக்கொண்டுள்ளது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர் பல்வேறு சவால்களுக்கு முஸ்லிம் சமூகம் முகம் கொடுத்துள்ளது. அத்துடன், பல பிரச்சினைகளையும் எமது முஸ்லிம் சமூகம் தற்போது சந்திக்கிறது.

இந்த நிலையில், நாம் சிந்தித்து செயற்பட வேண்டும். மேலும், இனங்களுக்கிடையே சமாதானத்தையும் அமைதியையும் ஏற்படுத்த நோன்புப் பெருநாளில் இறைவனை பிரார்த்திப்போம் எனவும் அந்த சபை கேட்டுக்கொண்டுள்ளது.

கருத்து தெரிவிக்க