உள்நாட்டு செய்திகள்புதியவை

இன்றும் பல்வேறு பகுதிகளில் மழை!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாற் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மேல், தென், மத்திய, சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் எனவும் மேலும் சில பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவப்பெயர்ச்சி வலுவடைந்து செல்வதன் காரணமாக இவ்வாறான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க