மலையகச் செய்திகள்

வரைதல் கோல் கண்டுபிடித்த மலையக சிறுவன்

நுவரெலியா -கிரெட்வெஸ்டன் பகுதியை சேர்ந்த சிவகுமார் நதீஸ் என்னும் சிறுவன் மின்கலத்தில் இயங்கும் வரைதல் உபகரணம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.

மின்கலம்,மோட்டார்,மின்குமிழ் போன்றவற்றை பயன்படுத்தி இந்த உபகரணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு தொடர்பில் நதீஸ் தெரிவிக்கையில் பொழுதுபோக்காகவே நான் இந்த கருவியை கண்டு பிடித்தேன்.இந்த கருவியை மேலும் நேர்த்தியாக வடிவமைக்க வேண்டும் .

இதன் மூலம் வரைதலில் பயன்படுத்தக்கூடிய மூன்று அல்லது நான்கு வடிவமைப்புகளை பெற்றுக்கொள்ள முடியும். வரையக்கூடிய சித்திரங்களை மேலும் நேர்த்தியுடனும் அழகாகவும் வரைய முடியும் என சொல்கிறார்.

கிரெட்வெஸ்டன் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்விகற்கும் நதீஸ்,
பொறியிலாளராக வர விரும்புவதோடு மிகப்பெரிய பயனுள்ள இயந்திரம் அல்லது உபகரணத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே தனது கனவு என்கிறார்.

கருத்து தெரிவிக்க