உள்நாட்டு செய்திகள்புதியவை

ஈஸ்டர் தாக்குதல் – இலஞ்சம் வழங்க முற்பட்டவருக்கு விளக்கமறியல்

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

ஹொரவப்பொத்தான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு 5 இலட்சம் ரூபா இலஞ்சம் கொடுக்க முற்பட்ட போது குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் இன்று 4ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர், இஸ்லாமிய அடிப்படை வாதத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தனது உறவினரை பிணையில் விடுவிக்குமாறு கோரி ஹொரவப்பொத்தானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் வழங்க குறித்த சந்தேக நபர் முற்பட்டிருந்தார்.

கருத்து தெரிவிக்க