உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்புதியவை

ஹிஸ்புல்லாவுக்கு எதிராக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவுக்கு எதிராக இன்று 4ஆம் திகதி காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஈஸ்டர் தினத்தில் குண்டு தாக்குதல் நடத்திய சஹரானுடன் ஹிஸ்புல்லாவுக்கு உள்ள தொடர்பு குறித்து முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு கல்லடியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஈழவர் ஜனநாயக முன்னணியின் தலைவர் க.பிரபாகரன் இதனைத் தெரிவித்தார்.

பொதுமக்களினால் கண்டறியப்பட்ட உண்மையின் அடிப்படையிலேயே ஆளுநர்கள் இராஜினாமா செய்துள்ளனர். எனினும் ஏனைய அமைச்சர்கள் இராஜினாமா செய்துள்ளமை கேலிக்கூத்தான ஒரு விடயமென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கருத்து தெரிவிக்க