வடக்கு செய்திகள்

மன்னார்- தாழ்வுபாட்டில் 1011.3 கிலோ கிராம் பீடி சுற்றும் இலை பொதிகள் மீட்பு

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட தாழ்வுப்பாடு கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் மேற்கொண்ட சோதனைகளின் போது 33 பொதிகளைக் கொண்ட 1011.3 கிலோ கிராம் பீடி சுற்றும் இலைகளை மீட்டுள்ளனர்.

தாழ்வுபாடு கடற்கரையில் கரையொதிங்கிய நிலையிலே குறித்த பொதிகள் கடற்படையினரினால் மீட்கப்பட்டுள்ளது.

அத்தோடு கடற்படையினரினால் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும், கைப்பற்றப்பட்ட பீடி இலைப் பொதிகளும் யாழ் சுங்கத் திணைக்கள அதிகாரிகளிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை யாழ் சுங்கத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க