உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

ரிஷாட் பதியூதீனை கைது செய்தே விசாரணை செய்ய வேண்டும் – ஜயந்த சமரவீர

அமைச்சர் ரிஷாட் பதியூதீன் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட வேண்டுமென தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமுன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த ஜயந்த சமரவீர, பதவிகளை இராஜினாமா செய்த ஆளுநர்களான அசாத் சாலி, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் மற்றும் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் ஆகியோரை கைது செய்து விசாரணை செய்ய வேண்டுமெனவும், தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதற்கு முன்னர் ரவி கருணாநாயக்க, திலக் பாரபன ஆகியோர் தமது பதவிகளை இராஜினாமா செய்தனர். என்ன பிரயோசனம், இரண்டு மூன்று மாதங்களில் மீண்டும் அவர்களுக்கு புதிய அமைச்சுப் பொறுப்புக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோலவே நேற்றைய தினம் தமது பதவியை இராஜினாமா செய்த ரிஷாட் பதியூதீன் உள்ளிட்ட அனைத்து முஸ்லிம் உறுப்பினர்களுக்கும் அமைச்சுப் பொறுப்புக்கள் கிடைக்குமென தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க