வடக்கு செய்திகள்

பாடசாலைகளில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது-மனித உரிமை ஆணைக்குழு

இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னர் பாடசாலை சமூகத்திற்கிடையிலான இடைவெளிகள் குறித்து எமக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதென இலங்கை மனித உரிமை ஆணைக்கழு தெரிவித்துள்ளது.

வவுனியா மனித உரிமை ஆணைக்கழு அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது வன்னிப்பிராந்திய மனித உரிமை ஆணைக்குழுவின் பொறுப்பதிகாரி எம். ஆர். பிரியதர்சன இதனை தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெளிவுப்படுத்துகையில், பயங்கரவாத தாக்குதலின் பின்னர் பாடசாலைகளில் ஒரு சமூகத்தை சேர்ந்த பிள்ளைகள் ஒடுக்குதலுக்குட்படும் வாய்ப்புகள் இருக்கின்றது. அவ்வாறான சம்பவங்கள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்றுள்ளது.

இதன் அடிப்படையில் மனித உரிமை ஆணைக்குழுவின் வவுனியா காரியாலயமானது பாடசாலை மாணவர்கள் மத்தியில் நல்லுறவை ஏற்படுத்துவது தொடர்பாக கவனம் செலுத்தி வருகின்றது. இதற்காக பல வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பாடசாலை மாணவர்கள் மத்தியில் மத்தியில் நல்லிணக்கமான சூழலை உருவாக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்.

முதற்கட்டமாக நாம் வவுனியா மாவட்டத்தில் இயங்கும் சிங்கள, தமிழ், முஸ்லீம் பாடசாலை அதிபர்களை அழைத்து அவர்களிடமிருந்து பல்வேறு பட்ட பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடியிருக்கின்றோம்.

மாணவாகள், முஸ்லீம் ஆசிரியர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சனைகள் அவர்களது ஆடை தொடர்பில் உள்ள பிரச்சனைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர்.

இதன் அடிப்படையில் நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் தொடர்பில் நுணுக்கமாக ஆராய்ந்து கல்வி அமைச்சுக்கு சில சிபாரிசுகளை அனுப்பியுள்ளோம் என தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க