கிழக்கு செய்திகள்

கொடுவாமடுவில் மோட்டார் சைக்கிள் விபத்து-இளைஞர்கள் இருவர் உயிரிழந்தனர்

மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பதுளை வீதி கொடுவாமடுவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் செங்கலடி கணபதி நகரைச் சேர்ந்த பேரின்பராசா ஜெயரூபன் (வயது 19), கௌரீஸ்வரன் விதுஷ‪ன் (வயது 20) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

நண்பர்களான இவ்விருவரும் பதுளைவீதி வழியாக செங்கலடி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த நிலையில் சருகுபுலி எனப்படும் புலியினத்தை சார்ந்த விலங்கு பாதையை கடக்க முற்பட்டுள்ளது.

அச்சமயம் வேகமாக வந்த குறித்த மோட்டார் சைக்கிள் சருகுபுலியை மோதியதில் தடம்புரண்டு விபத்து நேர்ந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

இளைஞர்கள் இருவரும் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இதேவேளை சருகுபுலியும் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளது.

சடலங்கள் மரண பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க