உள்நாட்டு செய்திகள்புதியவை

அமித் வீரசிங்கவுக்கு பிணை வழங்கிய நீதவான் நீதிமன்றம்!

மகசொகன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்கவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

இனங்களுக்கிடையில் வன்முறைகளை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டாரெனும் குற்றச்சாட்டில் தெல்தெனிய பகுதியில் கைது செய்யப்பட்ட அவர் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் மினுவாங்கொட, குருநாகல் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இனரீதியான தாக்குதல்களைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க