உள்நாட்டு செய்திகள்புதியவை

ஹிஸ்புல்லா தொடர்பில் குற்றப்புலனாய்வுத் துறை விசாரணை!

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா குறித்து வெளியாகியுள்ள சி.சி.ரி.வி. காணொளி தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பாசிகுடா பிரதேசத்தில் அமைந்துள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் ஹிஸ்புல்லா, சவுதி பிரஜைகள் சிலரை சந்தித்த சம்பவம் தொடர்பாக சி.சி.ரி.வி. காணொளி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்த காணொளி தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பாதுகாப்புத் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பின்னர், சந்தேகத்திற்கிடமான சிலரை கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா சந்தித்திருந்ததாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த நிலையில், இதில் உள்ளவர்கள் அரபுநாட்டு முதலீட்டார்கள் என்றும் தான் எந்தவித சட்டவிரோதமான செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லை என்றும் ஹிஸ்புல்லா நேற்று திங்கட்கிழமை தெரிவித்திருந்தார்.

கருத்து தெரிவிக்க