உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்புதியவை

மட்டக்களப்பு பல்கலைக்கழகம் – உடனடி விசாரணைகள்

மட்டக்களப்பு பல்கலைக்கழகம் குறித்த தகவல்களை வழங்குமாறு ஊழல் மோசடிகள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு கோரியுள்ளது.

குறித்த முறைப்பாடுகள் தொடர்பான ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவு முன்னெடுக்கும் ஆரம்பகட்ட விசாரணைகளுக்காக பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் கோரப்பட்டுள்ளது.

இதன்படி, கற்பித்தல் செயற்பாடுகளுக்காக பங்குபற்றும் விரிவுரையாளர்களின் எண்ணிக்கை, உபவேந்தர் பற்றிய தகவல்கள் அத்துடன் அந்த நிறுவனம் குறித்த வேறு தகவல்களும் கோரப்பட்டுள்ளன.

குறித்த பல்கலைக்கழகத்துக்கும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கும் இடையில் உள்ள தொடர்புகள் குறித்து கடந்த சில நாட்களாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில், குறித்த விமர்சனங்களுக்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் இவ்வாறு விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க