விளையாட்டு செய்திகள்

இந்திய அணியின் பதற்றம் தென்னாபிரிக்காவுக்கு வாய்ப்பாக அமையும் – கிரிக்கட் வீரர் காலிஸ்

இந்திய அணியின் முதல் நாள் போட்டி பதற்றம் தென்னாபிரிக்க அணிக்கு வாய்ப்பாக அமையும் என தென்னாபிரிக்க அணியின் முன்னாள் கிரிக்கட் வீரர் காலிஸ் தெரிவித்துள்ளார் .

உலக கிண்ண கிரிக்கட் தொடரில் தென்னாபிரிக்க அணி இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ள நிலையில் 3 வது போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்த போட்டியில் தென்னாபிரிக்க தோல்வியை தழுவுமானால் அடுத்த சுற்று வாய்ப்பு கேள்விக்குறியாகும் .

இந்நிலையிலேயே தென்னாபிரிக்க அணிக்கு ஊக்கமளிக்கும் வகையில் காலிஸ் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

‘இந்திய அணி ஒரு முதல் ஆட்டத்தில் ஆடுவதால் அந்த அணியினருக்கு பதற்றம் உருவாகலாம். இது தென்னாபிரிக்க அணி வெற்றி பெற உதவியாக இருக்கக்கூடும். இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நமது அணி சிறிய தவறு செய்தாலும் தோல்வியை சந்திக்க நேரிடும்.

தென்னாபிரிக்க அணி எஞ்சிய எல்லா ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மாத்திரமே அரையிறுதிக்கு முன்னேற முடியும்’ என்று அவர் இது தொடர்பாக மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க