உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஜனாதிபதி மைத்திரி கண்டிக்கு விஜயம்! – தேரரின் கோரிக்கைகள் நிறைவேறும் சாத்தியம்

ரத்தன தேரர் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட்டத்தினால் தற்போது பெரும்பாலான பொதுமக்கள் ஒன்றிணைந்து பலத்த எதிர்ப்பை தெரிவித்து வருகின்றமையால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டிநோக்கி செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

என்றபோதிலும் மேல்மாகாண ஆளுநர் அசாத் சாலியை பதவியிலிருந்து விலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளதாகவும் உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை அமைச்சர் ரிஷாட் பதியூதீனை பதவியிலிருந்து விலக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ், அமைச்சர் ரிஷாட் பதியூதீன் ஆகியோர் பதவி விலக்கப்படுவர் என ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்து தெரிவிக்க