உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

ரத்தன தேரரின் கோரிக்கை குறித்து ஆராயுமாறு சம்பிக்க ஜனாதிபதியுடன் பேச்சு!

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான உண்ணாவிரதத்தால் அவரது உடல் நிலை குறித்து அமைச்சர் பாட்டலி சம்பிக்க நேரில் சென்று ஆராய்ந்துள்ளார்.

அவர் இன்று காலை கண்டிக்கு சென்று ரத்தன தேரரை பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் எனக்கு நெருக்கமான அரசியல் நண்பர் எனவும் அவரது முயற்சி வெற்றியளிப்பதற்காக பலப்படுத்தும் முகமாகவே தான் இங்கு வந்ததாகவும் கூறினார்.

ரத்தன தேரர் முன்வைத்துள்ள கோரிக்கைகள் குறித்து தாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்றைய தினம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அதற்கு இன்றைய தினம் உரிய பதிலை எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் கூறினார்.

கருத்து தெரிவிக்க