இலங்கை

இலங்கைப் பெண்களுக்கு ஏற்பட்ட அவலநிலை! காணொளியாய் வெளியான பொலிஸாரின் அடாவடித்தனம்.

அமெரிக்காவில் கொலை செய்யப்பட்ட கருப்பினத்தவருக்கு ஆதரவாக கொழும்பில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டம் கைவிடப்பட்டது.குறித்த போராட்டத்திற்கு நீதிமன்றம் அனுமதி வழங்காததை அடுத்து இதில் கலந்து கொள்ள வந்த அனைவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். அந்த வகையில் இலங்கை பொலிஸார் பெண் ஒருவரை கைது செய்து ஜீப் வண்டியில் தூக்கிப்போடும் காட்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், பெண் ஒருவரை கைது செய்யும் போது பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் உடன் இருக்க வேண்டும் என்று ஒரு சட்டம் இருக்கும பட்சத்தில் குறித்த காட்சியில் பல பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்த பெண்ணை வழுக்கட்டாயமாக தூக்கி ஜீப் வண்டிக்குள் வீசியுள்ளனர்.இதேவேளை பல பெண்கள் இதில் தாக்குதலுக்கு இலக்காகியதாக குறிப்பிட்ப்படுகின்றது. மேலும் பெண்மணி ஒருவர் கீழே விழுந்து கிடப்பதையும், அவருக்கு முதலுதவிகள் செய்வதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. இது தொடர்பான காணொளிதற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்து தெரிவிக்க