உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

வைத்தியருக்கு எதிராக இன்றும் 40 முறைப்பாடுகள் !

குருணாகலை வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் மொஹமட் ஷாபிக்கு எதிராக இன்றும்  40 பெண்கள், முறைப்பாடுகளை பதிவுசெய்துள்ளனர்.

குருணாகலை மற்றும் தம்புள்ளை பகுதிகளைச் சேர்ந்த பெண்களாலேயே இவ்வாறு முறைப்பாடுகள் செய்யப்பட்டன என்று வைத்தியசாலை நிர்வாக சபை தெரிவித்துள்ளது.

மகப்பேற்றின்போது சிங்கள, பௌத்த பெண்களை குறிவைத்து, கருத்தடை சத்திரசிகிச்சை மேற்கொண்டுள்ளார் எனக் கூறப்படும் குறித்த வைத்தியருக்கு எதிராக இதுவரையில் 500 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

கருத்து தெரிவிக்க