உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

செவ்வாய் கூடுகிறது நாடாளுமன்றம்!

நாடாளுமன்றம் நாளை மறுதினம் (04) பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.
4,6 மற்றும் 7 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள சபை அமர்வுகளின்போது விவாதிக்கப்படவேண்டிய விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நாளை (03) கட்சித் தலைவர்கள் கூட்டமும் நடைபெறவுள்ளது.
21/4 தாக்குதல் தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் திறந்த அமர்வு, அத்துரலிய ரத்தன தேரரால் முன்னெடுக்கப்பட்டுவரும் உண்ணாவிரதப்போராட்டம் உட்பட மேலும் சில விடயங்கள் தொடர்பில் கூட்டுஎதிரணி கேள்விக்கணைகளைத் தொடுக்கவுள்ளது.
இவை குறித்து ஆளுங்கட்சியும் தமது நிலைப்பாட்டை அறிவிக்கும். எனவே, இவ்வார நாடாளுமன்ற அமர்வானது முக்கியத்துவமிக்கதாக கருதப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க