உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

தலவாக்கலை ஹொலிரூட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காணி ஒதுக்கீடு.

தலவாக்கலை ஹொலிரூட்டில் கடந்த வாரம் இடம்பெற்ற தீவிபத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் கலாசார மண்டபம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான உலர் உணவுகளை பிரதேச செயலகம் மற்றும் தோட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

பாதிக்கப்பட்டவர்களுக்கான உடுதுணிகள் மற்றும் மாணவர்களுக்கான சப்பாத்துக்கள், சீருடைகள் போன்றவை தலவாக்கலையின் நகர வர்த்தகர்களால் வழங்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறுகிறார்.


இந்தநிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக கூடாரங்கள் அமைத்துக்கொடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இதற்கான காணிகளை தோட்ட நிர்வாகம் ஏற்கனவே ஒதுக்கிக்கொடுத்துள்ளது.

எனினும் பாதிக்கப்பட்ட வீடுகளையே மீண்டும் திருத்தித்தருவதாக சிலர் கூறியதாகவும் எனினும் அதற்கு ஹொலிரூட் மக்கள் உடன்படவி;ல்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க