கிழக்கு செய்திகள்புதியவை

மட்டக்களப்பு அம்பிளாந்துறையில் 41ஆம் நாள் நினைவஞ்சலி

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திவேண்டி மட்டக்களப்பில் 41ஆம் நாள் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டம் அம்பிளாந்துறையில் நேற்று வெள்ளிக்கிழமை 31ஆம் திகதி இரவு முத்துலிங்கப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

அம்பிளாந்துறை இளைஞர்களால் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கடந்த ஈஸ்டெர் தினத்தன்று இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதல்களில் உயிர்நீத்த உறவுகளுக்கு தீபச்சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் மண்முனை தென்மேற்கு பிரதேசசபை உறுப்பினர் செ.நகுலேஸ்வரன், அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலய அதிபர் சு.தேவராசா மற்றும்பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

கருத்து தெரிவிக்க