உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

இஸ்லாமிய பயங்கரவாதம் ஒழிக்கப்படவேண்டும்- வியாழேந்திரன்

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இஸ்லாமிய பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான தாக்குதலிலே மட்டக்களப்பு மாவட்டம் அடங்கலாக 250க்கும் மேற்பட்ட அப்பாவி உயிர்கள் பலிக்கடாவாக்கப்பட்டிருக்கின்றன.

அதிலே தற்போதும் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த பயங்கரவாதத் தாக்குதலோடு தொடர்புபடுத்திப் பேசப்பட்டு வருகின்றவரும். குற்றம் சுமத்தப்படுகின்றவர்களான, அமைச்சர் றிசாட் பதிவுதீன், மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா போன்றவர்கள் உடனடியாக அந்தப் பதவியிலிருந்து விலக்கப்பட வேண்டும்.


இந்தக்கோரிக்கையை முன்வைத்தே அடையான உண்ணா விரதப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இஸ்லாமிய பயங்கரவாதம் நாட்டிலிருந்து அடியோடு அழிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்னிலையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க