உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

தெரிவுக்குழுவில் சாட்சியமளிக்க தயார் – ஞானசார தேரர்

“ 21/4 தாக்குதல் தொடர்பில், நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பதற்கு தயாராகவே இருக்கின்றேன்.” – என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

“ இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தொடர்பான அனைத்து தகவல்களும் என்னிடமுள்ளன. சஹ்ரான் குழுவினர் தொடர்பில் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்தோம். தற்போது மேலும் சில தகவல்கள் கைவசமுள்ளன.

எனவே, 21/4 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜாராகி, இவை குறித்து சாட்சிமளிப்பதற்கு, தகவல்களை வழங்குவதற்கு தயாராகி வருகின்றேன்.

எனினும், தெரிவுக்குழு அமர்வில் நடப்பவை ஊடகங்கள் வாயிலாக நேரடியாக ஒளிபரப்படக்கூடாது. இந்த நிபந்தனை ஏற்கப்படுமானால் எந்நேரத்திலும் சாட்சியமளிக்க நான் தயார். ” என்றும் ஞானசார தேரர் குறிப்பிட்டார்.

கருத்து தெரிவிக்க