உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

1983இல் செய்த தவறை இனியும் செய்ய இடமளியோம்! – ரணில்

நாட்டில் தற்போது ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு மற்றும் ஸஹராணின் தேசிய தௌய்த் ஜமாத் அமைப்பினரும் முற்றாக துடைத்தழிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் இவ்வாறான தீவிரவாத நடவடிக்கைகள் இனியும் நாட்டிற்குள் செயற்பட இடமளிக்கப்படாத வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள பாதுகாப்பு தரப்பினர் மிகக் குறுகிய காலப்பகுதிக்குள் தீவிரவாதத்தை ஒழித்துள்ளதாகவும், நாட்டில் பல்வேறு தரப்பினரால் பொய் வதந்திகள் பரப்பி அச்ச நிலையை ஏற்படுத்த முயற்சி செய்வதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியதோடு 1983ஆம் ஆண்டு இடம்பெற்ற தவறை மீண்டும் செய்ய தயாரில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அம்பாறையில் கடந்த 30ம் திகதி இடம்பெற்ற நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க