உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்வடக்கு செய்திகள்

முல்லைத்தீவில் வறட்சியால் 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் வறட்சியால் 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு  மாவட்ட செயலாளர்  ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்

தற்போது நிலவி வருகின்ற வரட்சி நிலை காரணமாக எங்களுடைய மாவட்டத்திலும் மக்கள் வரட்சியினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அந்தவகையிலேயே புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேச செயலக பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டிருப்பது தொடர்பான விவரங்கள் எமக்கு அறிக்கையிட பட்டிருக்கின்றது

அந்தவகையிலே   புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் ஆயிரத்து 967 குடும்பங்களை சேர்ந்த 6ஆயிரத்தி 296 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர் .

கரைதுறைப்பற்று பிரதேசத்தில் 10ஆயிரத்து 799 குடும்பங்களை சேர்ந்த 33 ஆயிரத்தி 797 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர்

அந்தவகையிலேயே பாதிக்கப்படடவர்களுக்கான குடிநீர் வசதிகளை அனர்த்த முகாமைத்துவ அமைச்சு ஊடாக  வழங்கி வருகின்றோம் என  முல்லைத்தீவு  மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன்  தெரிவித்தார்

கருத்து தெரிவிக்க