உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

நீர்கொழும்பில் பொய்யான பிரசாரம். மாணவர்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

நீர்கொழும்பில் இன்று முற்பகல் பரவிய பொய்யான தகவல்களை கேட்டு பீதி கொள்ளவேண்டாம் என்று காவல்துறையினர் கோரியுள்ளனர்.

நீர்கொழும்பு கத்தோலிக்க பாடசாலைகள் மீது தாக்குதல் நடத்தப்படப்போவதாக இன்று பொய்யான தகவல் பரப்பப்பட்டது.

இதனைக் கேள்விப்பட்டு பெற்றோர் பீதியடைந்தனர்

எனினும் அவர்கள் கொள்ளத்தேவையில்லை. உரியமுறையில் பாடசாலைகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த தகவல் பரவியதை அடுத்து பெருமளவான கத்தோலிக்க பாடசாலைகளில் மாணவர்கள் அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கருத்து தெரிவிக்க