உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டபோதும் பாதுகாப்பு சபை கூட்டப்படவில்லை.

தாக்குதல்கள் தொடர்பாக எச்சரிக்கைகள் பாதுகாப்பு செயலாளருக்கும் காவல்துறை அதிபருக்கும் விடுக்கப்பட்டபோதும், தேசிய பாதுகாப்பு சபை கூட்டப்படவில்லை.

இந்த சாட்சியத்தை தேசிய புலனாய்வு சேவையின் தலையதிகாரி சிசிர மெண்டிஸ் வழங்கியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன் நேற்று சாட்சியமளித்தபோதே சிசிர மெண்டிஸ் இதனைக்குறிப்பிட்டார்.

தாக்குதல்களுக்ககு முன்னதாக பாதுகாப்பு சபை பெப்ரவரி 19ஆம் திகதியன்றே கூட்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தக்குழுவின் முன்னால் பாதுகாப்பு செயலாளர் ஷாந்த கோட்டேகொடவும் சாட்சியமளித்தார்.

கருத்து தெரிவிக்க