உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

மஸ்கெலியவில் கிராம சேவகர் காரியாலயம் இன்றி மக்கள் பணிகள் ஸ்தம்பிதம்

நுவரெலிய  மாவட்ட மஸ்கெலிய பிரதேச சபைக்கு உட்பட்ட  320/N பிரவுன்லோ தோட்ட  கிராம சேவகர் பிரிவிற்கு முறையான  காரியாலயம் இன்றி தாம் பல்வேறுபட்ட சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக  இந்த  பிரிவுகளை சேர்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

320/N  பிரிவு கிராம  சேவகர் பிரிவில் பிரவுன்லோ கிளன்டில்ட் பிரேமா கங்கேவத்த குடாமஸ்கெலிய களனி வத்த போன்ற  தோட்டங்களை சேர்ந்த  ஆறாயித்திற்கும் மேற்பட்டவர்கள்  வாழ்ந்து வருகின்றனர்.

இந்த பகுதிகளை சேர்ந்த மக்கள்  பல மைல் தூரம் நடந்து குடாமஸ்கெலிய பகுதியில் உள்ள தற்போதைய  கிராம அலுவலர் காரியாலயத்திற்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் .

இந்த காரியாலயம்  ஒரு சிரிய பெட்டி கடையில் அமைந்துள்ளதாகவும் இதில் ஒரு காரியாலயத்தை  கொண்டு செல்ல எதுவித  அடிப்படை வசதிகளும் இல்லை எனவும் கிராம  சேவை அதிகாரி  விசனம் தெரிவிக்கின்றார் .

இது விடயமாக  பலமுறை மஸ்கெலிய பிரதேச சபை தவிசாளரிடமும்  பிரதேச செயலாளரிடமும் முறைபாடுகள் செய்த போதிலும்  கவனம் செலுத்தப்படவில்லை என  இந்த பகுதி மக்களும்  சுட்டிகாட்டுகின்றனர் .

கருத்து தெரிவிக்க