உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்வடக்கு செய்திகள்

மாங்குளத்தில் குழு ஒன்றின் அட்டகாசம்: பெண்கள் உட்பட ஐவர் காயம்!

முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் நேற்றுப் புதன்கிழமை(27) இரவு வாள்வெட்டு குழு ஒன்று வீடு புகுந்து நடத்திய தாக்குதலில்  பெண்கள் உட்பட ஐவர் காயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

மாங்குளம் புதியகொலனியைச் சேர்ந்த சிவராசா என்பவரின் வீட்டுக்குள் வாள், கைக்கத்தி, கம்பி, பொல்லு முதலிய ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த கும்பல் அங்கிருந்தவர்களை சரமாரியாகத் தாக்கியதுடன் அங்கிருந்த பெறுமதியான பொருட்களையும் அடித்துடைத்து சேதமாக்கியுள்ளனர்

இவர்களது தாக்குதலுக்குள்ளான பெண்கள் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் வீட்டிலிருந்த சில பெறுமதியான உடமைகளையும் வாள்வெட்டு குழு திருடிக்கொண்டு சென்றுள்ளதாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்

இது தொடர்பான விரிவான விசாரணைகளை மாங்குளம்  காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க