உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

வெடிப்பொருட்கள் அகற்றப்படாது மீள்குடியேற்றம். வெடிபொருளால் ஒருவர் காயம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட நெத்தலியாற்றுப்பகுதியில் பொதுமகன் ஒருவர் தென்னந்தோட்டக் காணியினை உழவு செய்து கொண்டிருந்தவேளை நிலத்தில் புதையுண்டு கிடந்த வெடிபொருள் ஒன்று வெடித்துள்ளது

இதன்போது உழவு இயந்திரத்தின் சாரதி படுகாயமடைந்துள்ளார்.

இது தொடர்பில் விசுவமடு மேற்கு நெத்தலியாறு பகுதியில் வசித்து வரும் காணி உரிமையாளர் ஊர்மிளா கருத்து தெரிவித்தார்.

முன்னர் தங்கள் காணிகளுக்குள்ளும் அயல்காணிகளுக்குள்ளும் விடுதலைப்புலிகளின் மதிவெடி பிரிவினர் முகாம் அமைத்து இருந்தார்கள்.


எனினும் எதுவித வெடிபொருட்களும் அற்ற நிலையில் தாங்கம் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையிலேயே தென்னந்தோட்ட காணியினை உழும் போது வெடிபொருள் வெடித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

கருத்து தெரிவிக்க