உலகம்

ஒடுக்குமுறை எதிர்ப்புகள் மக்களிடமிருந்து வரும்போது அவற்றை ஆதரிப்பதும், வரலாற்றில் பதிவு செய்வதும் மிக அவசியம்.

ஜோர்ஜ் ப்லோய்ட் என்ற பெயருள்ள ஓர் அவ்ரோ அமெரிக்கர் வீதியில் காவல்துறையினரின் தாக்குதலுக்குள்ளாகி மரணமான சம்பவம் உலகை உலுக்கிக் கொண்டிருக்கிறது. நேற்று அவரை நினைவுகூர்ந்து ஒஸ்லோவில் நிகழ்ந்த ஆர்ப்பாட்டம் ஐம்பது பேருடன் மட்டுமே நடக்கலாம் எனக் (கொரோனா தொற்றைத் தவிர்க்க) காவல்துறையினர் அனுமதி வழங்கியிருந்தனர். வந்து கலந்துகொண்டோர் எண்ணிக்கை 14000வரை எனக் காவல்துறையினர் நம்புகின்றனர். எத்தனைபேர் வந்தாலும் அதில் நாம் தலையிட மாட்டோம் எனக் காவல்துறையினர் முன்கூட்டியே கூறியிருந்தனர். `இத்தருணத்தில் சட்டம் ஒழுங்குதான் எமக்கு முக்கியம் – நோய்த் தொற்றுக் கட்டுப்பாடு அல்ல` என விளக்கம் கூறப்பட்டிருந்தது.

அமெரிக்கத் தூதரகத்தின் முன் தொடங்கிய ஆர்ப்பாட்டம், ஆறு கிலோ மீற்றர் நடையாய் நீடித்துப் பாராளுமன்றின் முன் வந்து முடிந்தது. அமெரிக்கக் காவல்துறை பற்றிய எதிர்ப்புக் கோஷங்களோடும், மனித உரிமைகளுக்கான கோஷங்களோடும் இது நிறைவுற்றது.

பொதுவாக அரசியல் சார்ந்த விடயங்களில் கருத்துச் சொல்லாத அரசு குடும்பத்தினரும் இம்முறை வெளிப்படையாய்க் கருத்துக் கூறியது கவனத்துக்குரியது. இளவரசி மார்த்தா சமூக ஊடகத்தில் இருமுறை தன் எதிர்ப்பைப் பதிவிட்டார் (அவரது காதலரும் ஓர் அவ்ரோ அமெரிக்கர்). இதுபற்றி நேற்று (முடிக்குரிய ) இளவரசரிடம் கேட்டபோது, மக்களின் எழுச்சியும், தனது சகோதரியின் கருத்தும் நியாயமானவை என்பதாய்ப் பொருள்படக் கருத்துக் கூறியுள்ளார்.

இன்று நோர்வேயின் இன்னொரு நகரான ஸ்தவங்கரிலும் காவல், மருத்துவத் துறைகளின்
எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தாது ஏராளம் மக்கள் இதே நோக்கத்திற் கூடியுள்ளனர்.

கருத்து தெரிவிக்க