உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

தாய்மாரை சிறையிலடைத்து வைத்தியரை விடுதலை செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது – விமல்

கருக்கலைப்புச் சிகிச்சை செய்ததாகக் கூறப்படும் வைத்தியரை விடுதலை செய்து பாதிக்கப்பட்ட தாய்மாரை சிறையிலடைக்கும் சூழலே தற்போது ஏற்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச மற்றும் அவரது கட்சி உறுப்பினர்கள் கண்டி தலதா மாளிகைக்கு இன்று சென்று வழிபாடுகளில் ஈடுபட்டச் சென்ற வேளையில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது மல்வத்து விகாரைக்குச் சென்று மல்வத்து பீட மாநாயக்கர் அதி வணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரைச் சந்தித்து ஆசியும் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ரிசாட் பதியூதீனுக்கு எதிராக கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு அரச தரப்பிலிருந்து பலர் ஆதரவு தெரிவிக்கவுள்ளதாக தெரிவித்த அவர், சிலர் ரிசார்ட் இல்லாமல் அரசை அமைக்க முடியாது என அச்சமடைந்துள்ளதாகவும் கூறினார்.

கருத்து தெரிவிக்க