உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்வடக்கு செய்திகள்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராக மீண்டும் ருத்திரகுமாரன்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராக மீண்டும் விஸ்வநாதன் ருத்திரகுமாரன் தெரிவாகியுள்ளார்.

அண்மையில் பிலாடெல்பியாவில் நடைபெற்ற அமர்வின்போது இந்த தெரிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது அமரிக்காவை சேர்ந்த கலாநிதி சர்வேஸ்வரிதேவி தேவராஜா நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சபாநாயகராக தெரிவானார்.

சுவிட்ஸர்லாந்தை சேர்ந்த திருமதி ரஜனிதேவி சின்னத்தம்பி பிரதி சபாநாயகராக தெரிவானார்.

இந்தநிலையில் உலகளாவிய ரீதியில் இருந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக அந்த அரசாங்கத்தின் செய்திக்குறிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க