உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

நீராவியடிப்பிள்ளையார் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் தடுக்கப்பட்டார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மிக நீண்டகாலமாக சர்ச்சைக்குரிய பகுதியாக இருந்து வருகின்ற நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை அகற்றுமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

இதனையடுத்து, இது தொடர்பாக செய்தி சேகரிப்பு நடவடிக்கைக்காக சென்ற முல்லைத்தீவு மாவட்டத்தின் சுயாதீன ஊடகவியலாளரான கணபதிப்பிள்ளை குமணன் காவல்துறை அதிகாரிகளால் தடுக்கப்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது.

இதன்போது ஊடகவியலாளரின் கமராவும் சேதப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்து தெரிவிக்க