உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ராஜாங்க அமைச்சரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த ஆலோசனை

ராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்கவுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் காவல்துறைக்கு ஆலோசனை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற விவகாரத்துக்காக ஒதுக்கப்பட்ட 215ஆயிரம் ரூபாவை தமது சொந்த செலவுக்காக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு ராஜாங்க அமைச்சர் மீது சுமத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இந்த வழக்கில் சந்தேகநபராக கருதி ராஜாங்க அமைச்சரை, குருநாகல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு சட்டமா அதிபர் ஆலோசனை விடுத்துள்ளார்.

கருத்து தெரிவிக்க