புதியவைவெளிநாட்டு செய்திகள்

நரேந்திர மோடியின் பதவியேற்பில் பங்கேற்க கமலுக்கும் அழைப்பு

பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நரேந்திர மோடி வரும் 30 ஆம் திகதி மீண்டும் பிரதமராக பதவியேற்க இருக்கிறார்.

ஜனாதிபதி மாளிகையில் மாலை 7 மணிக்கு நடைபெறும் இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில், உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசனுக்கும், மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த விழாவில் பங்கேற்பது குறித்து இன்னும் கமல்ஹாசன் முடிவு எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

கருத்து தெரிவிக்க