உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

இரணைமடு பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்

இரணைமடு பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்
இந்த சம்பவம் நேற்று இரவு 8.45 மணியளவில் இரணைமடு புகையிரதக் கடவைக்கு அருகில் இடம் பெற்றுள்ளது
காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த இரவு தபால் புகையிரத்தில் மோதுண்டு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

சம்பவ இடத்திற்கு சென்ற மாங்குளம் காவல்துறையினர் உடலத்தை எடுத்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்

சம்பவத்தில் உயிரிழந்தவர் இலக்கம் 163 சேவிஷ் வீதி கனகாம்பிகை குளம் கிளிநொச்சியை முகவரியாகக் கொண்ட 5 பிள்ளைகளின் தந்தையாகிய 61 வயதுடைய இராசையா இராசேந்திரம் அடையாளம் காணப்பட்டுள்ளார்

கருத்து தெரிவிக்க