உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற 40 மாணவர்களுக்கு கௌரவிப்பு

முல்லைத்தீவு கல்வி வலயத்துக்குட்பட்ட கடந்த புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 40 மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று முல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கு பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது

இந்த நிகழ்வின் போது தண்ணீரூற்று இந்து தமிழ் கலவன் பாடசாலை முள்ளியவளை கலைமகள் வித்தியாலயம் முல்லைத்தீவு தமிழ்வித்தியாலயம் வற்றாப்பளை மகா வித்தியாலயம் முல்லைத்தீவு ரோமன் கத்தோலிக்க வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளை சேர்ந்த40 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டிருந்தனர்

 நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர்  தவராசாகரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் த அமலன் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் பொதுமக்கள் எனபலரும் கலந்து கொண்டிருந்தனர்

கருத்து தெரிவிக்க