உலகம்

சத்தமில்லாமல் சரிந்த நிலம்; கிராமத்தை விழுங்கிய கடல்!

ஓஸ்லோ: நார்வே நாட்டில் ஒரு கிராமமே கடலில் மூழ்கும் பேரதிர்ச்சி தரும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. சமூகவலைதளங்களில் பல வீடியோக்கள் நாள்தோறும் வைரலாகி வருகின்றன. சில வீடியோக்கள் ரசிக்கும்படியாக இருக்கும். சில வீடியோக்கள் நெஞ்சை பதைபதைக்க வைக்கும்படியாக அதிர்ச்சி தரும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது வைரலாகியுள்ளது.
நார்வே நாட்டின் ஆல்டா எனும் பகுதியில் நேற்று நடந்த பேரிடர் சம்பவம் இது. எந்தவிதமான சத்தமும் இல்லாமல் மிக அமைதியாக நடந்துள்ள இந்த சம்பவம் உலகையே உலுக்கி இருக்கிறது.

ஆல்டா எனும் அந்த கடற்கரை கிராமத்தில் நேற்று மக்கள் அனைவரும் தங்களுடைய அன்றாட வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தனர். எந்தவிதமான சத்தமோ, பேரலைகளோ, அதிர்வுகளோ எதுவும் இல்லை.

திடீரென அந்த கிராமத்தின் ஒரு பகுதி மெல்ல மெல்ல கடலுக்குள் செல்லத் தொடங்கியது. இதை உணர்ந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறினர். ஆனால் ஒரு சில நிமிடங்களில் அந்த கிராமத்தின் ஒரு பகுதியை கடல் விழுங்கிவிட்டது.

கருத்து தெரிவிக்க