உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்வடக்கு செய்திகள்

குற்றங்களுடன் தொடர்புடையர்கள் முற்றுகையில் இருந்து தப்பியோட்டம்

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் திரண்ட ஆவா குழுவின் உறுப்பினர்களை காவல்துறையினர் சுற்றிவளைத்தபோதும் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் இன்று (22) புதன்கிழமை மாலை இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் நல்லூர் பருத்தித்துறை வீதியில் ஆனைப்பந்திக்கு அண்மையாகவுள்ள விடுதி ஒன்றில் ஆவா குழு உறுப்பினர்கள் 50 பேர் வரை திரண்டுள்ளனர்.

ஆவா குழுவின் உறுப்பினரான மனோஜ் என்பவரின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கு அவர்கள் திரண்டுள்ளனர் என்று யாழ்ப்பாணம் சிறப்புப் காவல்துறைப் பிரிவுக்கு தகவல் கிடைத்திருந்தது.
அதனடிப்படையில் அந்த விடுதிக்குள் சிறப்புக் காவல் பிரிவினர் நுழைந்தனர்.

எனினும் காவல்துறையினர்; உள்நுழைவதை அறிந்த முக்கிய சந்தேகநபர்கள் விடுதியின் பின்பக்க மதிலால் பாய்ந்து தப்பி ஓடியுள்ளனர்.

இதனையடுத்து சுமார் 30 பேரிடம் விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர் ஐந்து பேரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

யாழ்ப்பாணத்தில் நடந்த அண்மைய வன்முறைகளுடன் தொடர்புடைய முக்கியமானவர்களே தப்பி ஓடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் தமது மோட்டார் சைக்கிள்களையும் கைவிட்டு விடுதியின் பின்பக்க மதிலால் தப்பித்தனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க