உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்வடக்கு செய்திகள்

கிளிநொச்சியிலும் வவுனியாவிலும் இராணுவத்தினர் அணிவகுப்பு

“சமாதானத்தின் தசாப்த நினைவுத்தினம்” என்ற பெயரில் இன்று கிளிநொச்சியில் இராணுவத்தினரின் அணிவகுப்பு ஒன்று நடத்தப்பட்டது.

கிளிநொச்சியின் ஏ 9 பாதையின் கரடிப்போக்கு சந்தியில் இருந்து பேரூந்துச் சாலை சந்தி வரையில் இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டது

மேஜர் ஜெனரல் ரவிப்பிரிய இதற்கு தலைமைத் தாங்கினார்.


இராணுவத்தின் அனைத்துப்பிரிவினரும் இதில் பங்கேற்றனர்

இதேவேளை வவுனியாவிலும் இராணுவத்தினரின் அணிவகுப்பு நடத்தப்பட்டது.

வன்னிக் கட்டளை தலைமையகத்தில் இருந்து ஸ்ரீபோதிதக்சினாராமய சந்தி வரை இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டது.

கருத்து தெரிவிக்க