உள்நாட்டு செய்திகள்வடக்கு செய்திகள்

உயிரிழந்த மீனவரின் குடும்பத்துக்கு ரூ. 10 இலட்சம்

மன்னார்-வங்காலை கடற்பரப்பில் கடந்த வருடம் திடீர் அனர்த்தத்தின்போது உயிரிழந்த மீனவர் ஒருவரின் குடும்பத்திற்கு இன்று   (22) 10 இலட்சம் ரூபா  காப்புறுதிப் பணம் வழங்கி வைக்கப்பட்டது.
மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட வங்காலை கிராமத்தைச் சேர்ந்த மீனவரின் குடும்பத்திற்கே குறித்த காப்புறுதி தொகை வழங்கிவைக்கப்பட்டது.
கடந்த வருடம் ஜனவரி  17 ஆம் திகதி வங்காலையில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கச் சென்ற  எஸ். குணசீலன் (வயது-51)  திடீர் அனர்த்தத்தின் போது உயிரிழந்தார்.

கருத்து தெரிவிக்க