உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்வடக்கு செய்திகள்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இன்று முதல் புறக்கணிப்பில்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இன்று முதல் விரிவுரைப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மாணவர் ஒன்றியம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தலைவர், செயலாளர் மற்றும் சிற்றுண்டிச் சாலை நடத்துநர் ஆகியோர் வழக்கில் இருந்து முழுமையாக விடுதலை செய்யப்படவேண்டும்.
அதுவரை தமது புறக்கணிப்புத் தொடரும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை உயிர்;த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் பாதுகாப்புக் கருதி யாழ்ப்பாண பல்கலைக்கழகம் உட்பட்ட நாட்டின் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க